அழகான க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு… ரசிகர்களை திணற வைத்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ பட நடிகை… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை மனிஷா யாதவ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/19  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அடுத்ததாக தமிழில் இவர் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

   

இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், கொஞ்சம் விமர்சனங்களையும் பெற்றார். அதன் பிறகு ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028, ஒரு குப்பை கதை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மனிஷா யாதவ். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் தனது அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் மழைக்காக வேண்டி  ஏங்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளா.ர் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரைப் பார்த்து ஏங்கி வருகின்றனர்.