தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வடிவுக்கரசி. இவர் முதன் முதலில் கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் ‘கன்னிப்பருவத்திலே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருக்கும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்துள்ளார். நடிகை வடிவுக்கரசி இயக்குனர் ஏ பி நாகராஜனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலம் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. கர்ஜனை, நீர்ப்பறவை, சிவாஜி தி பாஸ், பார்த்தாலே பரவசம், சினேகிதியே, நீ வருவாய் என, வான்மதி, ராஜாவின் பார்வையிலே, மகராசன் என ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வடிவுக்கரசி. இந்நிலையில் வடிவுக்கரசியின் ஒரு பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது வடிவுக்கரசி முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பாரதிராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ஒரு கொடூரமான மனைவியாக காட்டப்பட்டு இருக்கும். முதலில் பாரதிராஜா சிவாஜிக்கு மனைவி என்று சொன்னதும் இவர் தன்னை ஒரு ஹீரோயினாக மிகவும் அழகுபடுத்துக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றாராம்.
ஆனால் பாரதிராஜா வடிவுக்கரசியின் வசனத்தை சொல்ல அவருக்கு ரொம்பவே ஷாக் ஆகிவிட்டதாம் .அதாவது படத்தில் ஒரு கிழவி போன்ற வசனத்தை சொல்லி திட்டிக் கொண்டிருப்பார் வடிவுக்கரசி. அப்பொழுதுதான் வடிவுக்கரசிக்கு தெரிந்திருக்கிறது அந்த கதாபாத்திரம் எவ்வளவு கொடூரமான கதாபாத்திரம் என்று. வேறு வழியில்லாமல் நடித்திருக்கிறார்’ என்று இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் வடிவுக்கரசி.