சீரியல் நடிகை ப்ரீத்தாவின் கணவர் ஒரு இயக்குனரா… வைரலாகும் புகைப்படம்

2000 களில் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ராகவ்.

   

இவர் வில்லனாகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். ஜெயா தொலைக்காட்சியில்  சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்  ‘அண்ணி’  இந்த சீரியல் மூலமாக சின்னதிரையில்  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து  சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘அலைகள்’ என்ற சீரியலையும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சிகள் அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஒரு திறப்பு முறையாக அமைந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் , மானாட  மயிலாட  உள்ளிட்ட பல நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.

நடிகர் ராகவ் தன்னுடன் நடன நிகழ்ச்சி ஜோடியாக ஆடிய தொகுப்பாளர் பிரீத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரீத்தா சித்தி ,பாசமலர் போன்ற பல வெற்றி சீரியல்களில் நடித்துள்ளார்.

பிறகு இருவரும் சேர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘அரசி’  என்ற சீரியலிலும், ‘ஏய்  நீ ரொம்ப அழகா’ இருக்க என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளனர்.

அவரே தயாரித்து, இசையமைத்து ,நடித்த ‘நஞ்சுபுரம்’ என்ற திகில் திரைப்படத்தை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 6 ஆண்டுகள் கழித்து ‘டிக்கெட்’ என்ற திரைப்படத்தை இயக்கி  2014 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இப்படமானது மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை பெற்றது.எஸ்.சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  ‘எந்திரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் தொகுப்பாளராகவும், இயக்குனராகவும், கம்போசர்  என பன்முக திறமையைகொண்டு தமிழ் சினிமாவில்  ஜொலித்து வருகிறார்.

பிரீத்தா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘செவ்வந்தி’ என்ற தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் ராகவ் .

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.