தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக் கொண்ட பாலா பட நடிகர்.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்…

சிவாஜி புரெடக்சன் தயாரிப்பில் வெளியான அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் ஜி எம் குமார்.பின்னர் பாரதிராஜாவின் ‘கேப்டன் மகள்’ படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வெயில், அவன் இவன் படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவர் நடிகர் மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

   

கேப்டன் மகள், காதல் வைரஸ், ராமச்சந்திரா, தொட்டி ஜெயா, வெயில், மச்சக்காரன், ஆயுதம் செய்வோம், குருவி, மயாண்டி குடும்பத்தார். தீ, மாத்தி யோசி, மாலிங்க, அவன் இவன், வேலூர் மாவட்டம் சந்தமாமா, ஜகதல புஜபால தென்னாலிராமன், அப்புச்சி கிராமம், சண்டமாருதம், தாரை தப்பட்டை, என்னமா கத விடுறாங்க, திறப்பு விழா, எண்பத்தெட்டு, கிடா விடு என பல ஹிட்  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களை கூறும் ஜி எம் குமார் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தற்பொழுது இவர் வரும் 2023 மே 1 ஆம் தேதி காலாமானார் என்று குறிப்பிடப்பட்ட இந்த போஸ்டரை பதிவு செய்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..