நடிகர் அருண்பாண்டியன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?… அடடே இப்படி மாறிட்டாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண் பாண்டியன். இவர் ‘ஊமை விழிகள்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ஆனால் இவரது முதல் திரைப்படம் ‘சிதம்பர ரகசியம்’. இவர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்துள்ளார்.

   

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ‘ஐயங்கரன் இண்டர்நேஷனல்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்பொழுது நடிப்பை விட்டு விலகி திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுடன், நடிகர் அருண் பாண்டியன் இணைந்து  எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் அருண் பாண்டியனா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….