தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரேம்குமார்.ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி .ராமநாதபுரத்தின் மன்னரான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரன்.
இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே. பாலச்சந்திரன் தயாரிப்பில் சமூகத் கனி இயக்கத்தில் வெளியான ‘அண்ணி’ என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகினார்.
அதை தொடர்ந்து ‘அண்ணாமலை’ என்ற சீரியலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் தன்னோடு நடிக்கும் பூஜா உடன் ஜோடி நம்பர் 1இல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியும் பெற்றனர்.
இந்த தொடரில் இவரின் நடிப்பைப் பார்த்து, மு.கருணாநிதி ‘கண்ணம்மா’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
இவர் தமிழில் நேபாளி ,உன்னைப்போல் ஒருவன், மலைக்கோட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சிவப்பு மஞ்சள் பச்சை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 36 வயதினிலே படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.நடிகர் பிரேம்குமார் ஹம்சத்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரின் மூத்த மகன் சமுத்திரக்கனி நடித்திருந்த ‘அடுத்த சாட்டை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நடந்த தமிழ் சினிமாவில் நடிகர்கள் சங்க தேர்தலில், செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.