பல ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியத்தை உடைத்த மொட்டை ராஜேந்திரன்…. அவரது மொட்டைக்கு இதுதான் காரணமா?…

நடிகர் மொட்டை ராஜேந்திரன் தனது தலையில் முடியே இல்லாமல் போனதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் மொழிப்படங்களிலும் ஸ்டண்ட்மெனாக சினிமாவில் வாழ்க்கை தொடங்கியவர் ராஜேந்திரன். பின்னர் இவரது  திறமையை தெரிந்து கொண்ட இயக்குனர் பாலா ‘நான் கடவுள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும், இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

   

அந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் விரட்டி இருப்பார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குனர்கள் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தனர். ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பார்ப்பதற்கு இவர் வில்லன் போன்று இருந்தாலும், பழகுவதற்கு குழந்தை மனம் கொண்டவர். வெகுளியான மனிதர். எல்லோருக்கும் முன்பாக பேசக்கூடியவர்.

இதைத் தொடர்ந்து அவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்குனர்கள் வெற்றியும் கண்டனர். இவர் பத்து வருடங்களுக்கு மேல் படங்களில் நடித்து வருகிறார். சிறந்த காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிக முடிகள் இருந்ததாம். இவர் ‘ரெட் இந்தியன்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கதாநாயகன் அடி வாங்கி ஒரு குளத்தில் விழுவது போல காட்சி எடுத்தார்களாம்.

இரசாயன நீர் தேங்கி இருந்த அந்த குளத்தில் விழுந்தால் அவருக்கு முடி கொட்ட துவங்கி உள்ளது. நிறைய முடிகள் கொட்டவே மொட்டை அடித்துக் கொண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இவ்வாறு தான் எனது முடி சென்று நான் மொட்டையாகி விட்டேன் என பல ஆண்டு ரகசியத்தை தற்பொழுது கூறியுள்ளார் நடிகர் மொட்டை ராஜேந்திரன்.