‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 வில்லி வெண்பா இவர் தானா?… ‘என்ன நடந்தாலும் பாரதி எனக்கு மட்டும் தான்’… மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ள வெண்பா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியல் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

   

இதில் எதிரும் புதிருமாக இருந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் இடையில் தற்போது காதல் உணர்வு மலர்ந்துள்ளது. இந்த சீரியலில் தற்பொழுது பாரதியாக ரோஜா சீரியலல் நடிகர் சிப்புவும், கண்ணம்மாவாக நடிகை வினுஷாவும் நடித்து வருகின்றனர். தற்பொழுது பாரதிக்கும் , கண்ணம்மாவுக்கும் இடையில் காதல் மலர தொடங்கியுள்ளது.

இப்படி பாசிட்டிவாக கொண்டிருக்கும் இந்த் சீரியலின் அடுத்த கட்ட நகர்வை இன்னும் சூடாக்க இதில் தரமான வில்லி களமிறங்க உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை பாரதியின் மீது அதீத அன்பை சீசன் 1 ல் வெளிப்படுத்திய வெண்பா தான் அது. வெளிநாட்டில் இருந்து படிப்பை முடித்து விட்டு வரும் வெண்பா தனது அத்தை மகனான பராதியை காதலிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால் பாரதி கண்ணம்மாவை தான் காதலிப்பாராம்.இதனால் இவர்களை பிரிக்க மீண்டும் தனது வில்லத்தனத்தை கையில் எடுப்பாராம். ‘என்ன நடந்தாலும் பாரதி எனக்கு மட்டும் தான்’ என்பதில் தெளிவாக உள்ளார் வெண்பா. இதனால் இந்த முறை என்ன வெண்பா செய்யப் போகின்றார் எப்படியான வில்லத்தனங்களைக் காட்டப் போகின்றார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.