கணவரை பிரிந்து… விவாகரத்து பெற்ற நடிகை சரிதாவின் இரண்டு மகன்களையும் பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…

நடிகை சரிதா தனது இரண்டு மகன்களோடு எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1980 to 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை சரிதா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என கிட்டத்தட்ட பல மொழிகளில் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை சரிதா கதாநாயகியாக மட்டுமல்லாமல், முன்னணி நடிகைகளான நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ்மிதா சென், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

   

இவர் முக்கியமாக இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து  அசத்தியுள்ளார். நடிகை சரிதா 1978ல் மரோரா சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளிவந்த தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகை சரிதா அவர்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது அவர்களுக்கு இரண்டு திருமணங்கள்நடந்தது. ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்துள்ளது.

நடிகை சரிதாவிற்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது நடிகை சரிதா தனது  மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…