‘நேரம்’ பட நடிகர் நிவின் பாலியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்பப் புகைப்படம்…

இயக்குனர்  அல்போன்சு புதரன் இயக்கத்தில்  2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நேரம்’. இப்படத்தில்  நிவின் பாலி, நஸ்ரியா நசீம், சிம்கா, நாசர், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் நிவின்பாலி. இதுவே இவரின் முதல் தமிழில் திரைப்படமாகும். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.தந்தை பாலி போனவென்ச்சர் தாய் திரேசியம்மா பாலி.

நடிகர் நிவின் பாலி  Federal Institute of Science and Technology கல்லூரியில் Technology in Electronics & Communication பட்டம் பெற்றார்.தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள்  பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்தார் .

அவர் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்வேலையை   ராஜினாமா செய்துவிட்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார். அங்கு தன் தாயுடன் இருந்து சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான ‘Malarvaadi Arts Club’  என்ற படத்தில் மூலமாக மலையாளத் திரையுலகில்  அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இவர் ‘ரிச்சா’ என்ற  தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மாலை,தாரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் நிவின்பாலி எலி, இல்லை போய் சொல்லுங்க போன்ற குறுமடங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நிவின்பாலி  ரின்னா ஜாய்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.