ஒன்று சேர்ந்த கண்ணம்மா – பாரதி…!! அப்பாடி…! ஒரு வழியா முடிஞ்சிருச்சா… இல்ல, அங்க தான் வச்சாங்க ட்விஸ்ட்…

விஜய் டிவியில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இழுவையாய் ஆரம்பித்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள் எப்ப தான் இந்த  சீரியல் முடிப்பீங்க என்று கேள்வி கேட்க தொடங்கினர்.

   

இதை தொடர்ந்து சமீபத்தில் கூட இவர்கள் தங்கள் ஆயிரம் எபிசோடுகளை நிறைவு செய்து கொண்டாடி இருந்தனர். தற்பொழுது இந்த சீரியலில் பாரதி தலையில் அடிபட்டு நினைவை இழந்தார். இதை தொடர்ந்து கண்ணம்மா பழைய கண்ணம்மாவாக மாறி அவரது நினைவுகளை தூண்டினார். தற்பொழுது பாரதியும் பழையபடி மாறிவிட்டார். கண்ணம்மாவை மாற்ற முயற்சி செய்த பாரதி அது நடக்காததால் அவர் வெளிநாட்டிற்கு கிடைத்திருக்கும் வேலைக்கு கிளம்புகிறார்.

அவர் விடை பெற்று கிளம்பும்பொழுது கண்ணம்மா வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை யோசித்து கண்ணீர் விட்டு அழுகிறார். இதை தொடர்ந்து இருவரும் சந்தித்து ஒன்று சேர்ந்து விடுகின்றனர். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து விட்டதால்  இத்தோடு சீரியல் முடிந்துவிடும் என்று நினைத்த ரசிகர்களுக்கு சீரியல் குழு ஒரு சூப்பரான ட்விஸ்ட் வைத்தது.

சுபம் என்று சீரியல் முடித்து விடுவார்கள் என்று நினைத்தால் தொடரும் என்று சனிக்கிழமை எபிசோடு முடித்துள்ளார்கள். இதனால் கிளைமேக்ஸ் அடுத்த வாரம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். முடிச்சிட்டீங்கனு நினைச்சு சந்தோஷப்பட்டோமே என்று ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.