வட மாநிலத்தவர்கள் முன்னிலையில்.. தமிழர்களுக்கு பெருமை சேர்த்த நேதாஜி.. என்ன சொன்னார் தெரியுமா..?

நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மேல் தனி மரியாதையும் பற்றும் தற்போது வரை இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இன்றளவும் மக்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

   

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும்பாடு பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஒருமுறை வட மாநில மக்கள் முன்னிலையில் பேசிய போது, நான் அடுத்த ஜென்மத்தில் தமிழராக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட வட மாநிலத்தவர்கள் கோபமடைந்துள்ளனர்.

என்னடா இவர், நம் மாநிலத்தில் பிறந்துவிட்டு தமிழ் நாட்டில் பிறக்க விரும்புவதாக கூறுகிறாரே என்று நினைத்துள்ளனர். அவர் அப்படி கூறியதற்கு முக்கிய காரணமே வெள்ளையர்களோடு போரிட, ஆட்கள் தேவைப்படுவதாக அறிவித்தவுடன் முதலில் ஆர்வமாக வந்து அவர் படையில் சேர்ந்தது தமிழர்கள் தான். அதற்கு மிக முக்கிய காரணம் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள் தான்.