நல்லா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இப்படி பிரிஞ்சிடுச்சே…! கண்ணன், ஜீவாவை தொடர்ந்து இவரும் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா??….!!!!

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக உள்ளதுதான் தொலைக்காட்சிி சீரியல்கள்….பல வீடுகளில் வீட்டு வேலை செய்யாமல் கூட பெண்கள் சீரியல் பார்ப்பதாக கணவர்கள் கூறுகிறார்கள்…

   

இந்நிலையில் பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.  அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

ஏனெனில் அது அண்ணன் தம்பிகளின் பாச பிணைப்பை எடுத்துரைப்பதாக உள்ள நிலையில் மக்கள் அனைவரும் விரும்பி பார்த்து மகிழ்வர்.  தற்போது சீரியல் விறுவிறுப்பான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சகோதரர்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் மீனாவின் தங்கை திருமணத்தின்போது கண்ணன் செயலை பெரிதாக்கியதால் ஒற்றுமையாக பாண்டியன் ஸ்டோர் குடும்பம்  தற்போது சிதறி போய்விட்டது.

திருமணத்தின் போது கையில் காசு இருக்கு என்பதால் கண்ணன் மற்றும் கதிர் ஆகியோர் தனித்தனியாக மொய் வைத்தனர்.  மேலும் பாண்டியன் ஸ்டோர் பெயரில் மொய் வைக்க கூறி மூர்த்தி கொடுத்த பணத்தை கண்ணன், தனம்-மூர்த்தி என்கிற பெயரில் மொய் வைத்து விட,

ஜீவா மீனா பெயர் மொய்  லிஸ்டில் இல்லாமல் போனதை ஜீவா பார்த்து அதை பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டார். தன்னை அனைவரும் புறக்கணிப்பதாக எண்ணி தன்னுடைய அண்ணனிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

இதைப் பார்த்த மூர்த்தி, இந்த பிரச்சனைக்கு கண்ணன் தான் காரணம் என தெரிவித்தும், ஜீவா கேட்காமல் விடாப்பிடியாக மனைவி மீனா மற்றும் குழந்தை கயலை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கண்ணன் செய்த தவறை மூர்த்தி கேட்டதால் ஐஸ்வர்யா கடுப்பாகி கண்ணனை பேசவிடாமல் தடுத்து வீட்டை விட்டு  வெளியேறினார். தற்போது மூர்த்தி மற்றும் கதிர் ஆகிய இருவர் மட்டுமே ஒன்றாக உள்ளனர்.

இரண்டு தம்பிகள் வெளியேறிய நிலையில் நீ மட்டும் ஏம்பா என் கூட இருக்கா நீயும் போக வேண்டியது தானே? என கதிரை பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் மூர்த்தி .