சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சின்னத்திரையில் அண்ணாமலை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ஸ்வேதா பாரதி.

   

இவர் முதலில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்த நிலையில் அதன் பிறகு சின்ன திரையில் நுழைந்தார்.

அண்ணாமலை, வம்சம் மற்றும் மலர்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைப் போலவே நடனத்திலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் மானாட மயிலாட சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

அதன் பிறகு ரோஜா மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் தன்னுடைய சின்னத்திரை பயணம் தொடங்கியதாக ஸ்வேதா பல இடங்களில் கூறியுள்ளார்.

சூப்பர் மாம் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற பிறகு மிக கவனமாக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இவர் தமிழ் பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஹரி மற்றும் அரவிந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் தன்னுடைய மகன் அரவிந்த் பாரதியுடன் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான கனெக்சன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார்.

தற்போது பல சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அடிக்கடி தன்னுடைய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது ஸ்வேதா பாரதியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.