TRP யில் முன்னணி இடத்தை பிடித்த 5 டாப் சீரியல்கள்… முதலிடத்தை பிடித்தது இந்த சீரியலா?… குஷியில் ரசிகர்கள்…

தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகுத்துவிட்டது. சீரியலை பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் அதனோடு இணைந்து விட்டார்கள். சின்னத்திரை சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

   

அதற்கு தகுந்தவாறு இயக்குனர்களும் கதைக்களத்தை மாற்றி அமைத்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றனர். அதைப் பொறுத்து டிஆர்பி ரேட்டிங்கிலும் அந்த சீரியல்கள் முன்னணி இடத்தையும் பிடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வார டிஆர்பி யில் முன்னணி இடத்தைப் பிடித்த 5 சீரியல்கள் பற்றிய தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல்:

முதல் இடத்தை ‘எதிர்நீச்சல்’ சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியல் தற்பொழுது சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் புது புது கதைகளத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக இருக்கும் பாக்கியலட்சுமி, கணவரை நம்பி மோசம் போனதால் அதிலிருந்து மீண்டு தைரியமாக போராடி அவரையும் அவருடைய குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த சீரியலின் மீதிக்கதை. இதில் என்னதான் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் கோபியின் நடிப்பிற்காக பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய நோக்கமே அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின்னும் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதுதான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் ஒவ்வொருவரும் தனியாக போனாலும் மனதார ஒற்றுமையாக இருக்கிறார்கள். தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

கயல்:

நான்காவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியல் பெற்று கயல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தோழியே மனைவியாக கிடைத்தால் அது எவ்வளவு பெரிய வரம் என்பதை இந்த சீரியல் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர்.

சுந்தரி:

சன் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற சுந்தரி சீரியல் டிஆர்பி யில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. இதில் சுந்தரி கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு நடுவில் அவருக்கு ஏற்பட்ட திடீர் திருமணத்தால் அவருடைய கலெக்டர் கனவை எப்படி நிறைவேற்றுகிறார். இதற்கிடையில் இவர் கல்யாணம் செய்த கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இவரை தனியாக தவிக்க விடுகிறார். அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சுந்தரி எப்படி கலெக்டர் ஆகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.