தந்தையின் காலில் தனது மகன்களுடன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… வைரலாகும் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது தந்தையின் காலில் தனது மகன்களோடு விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது இவர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

   

இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவகாரத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவ்வப்பொழுது நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்பொழுது தனது உடற்பயிற்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அம்மா அப்பாவுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார். இதில் அவர் தனது மகனுடன் சேர்ந்து தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….