அப்போ ஜால்ரா தட்டினால் தான்.. ரஜினிகூட இருக்க முடியுமா..? மேடையில் சுந்தர்.சி சொன்ன தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் திரைப்படத்தின் கதைகள் மற்றும் பாடல்களில் தலையிடுவார் என்று பலரும் கூறுவது உண்டு. அதுமட்டுமல்லாமல், அவருக்கு ஏற்ற வகையில் கதையை மாற்றி விடுவாராம். இந்நிலையில் அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டு சரி என்று தலையை ஆட்டுபவர்களுடன் தான் அவர் பணி புரிவார் என்பதை சுந்தர்.சி மேடை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

   

அவர் கூறியிருப்பதாவது, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை என்னிடம் ரஜினிகாந்த் தான் சொல்வதற்கு சரி என்று கூறுபவர்களுடன் தான் அவர் பணியாற்றுவார் மாற்று கருத்துடன் இருப்பவர்களுடன் பணிபுரிய மாட்டார் என்று தெரிவித்திருந்தார். அப்போது தான் அருணாச்சலம் திரைப்படம் எடுப்பதற்காக ரஜினிகாந்தை பார்க்க சென்றிருந்தேன்.

அவர் தொடக்கத்தில் சர்ச் ஒன்றில் நான் மணி அடிப்பது போன்று காட்சி வந்தால் எப்படி இருக்கும் என்றார். எனக்கு அதில் விருப்பமில்லை. ஒரு மாஸ் ஹீரோ, சண்டை காட்சியுடன் அறிமுகமானால் தான் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். இருந்தாலும் நான் சூப்பர், நன்றாக உள்ளது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எனக்கு 26 வயது தான். பஞ்சு சாரை நான் பார்க்காமல் சென்றிருந்தால், ரஜினிகாந்த் சொன்னதற்கு ஓகே சொல்லியிருக்க மாட்டேன். அவர் அந்த படம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார். நான் ஊருக்கு கிளம்பி சென்றிருப்பேன் என்று சுந்தர்.சி கூறியுள்ளார்.