எந்த நடிகரும் அதை பண்ணல.. தன் திருமணத்தில் அப்டி ஒரு விஷயத்தை பண்ண அஜீத்.. திரையுலகையே நெகிழ வைத்த சம்பவம்..!

நடிகர் அஜித்குமார் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலித்தார் அதன் பிறகு 2000 ஆம் வருடத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள். அஜித் குமார் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படம் எப்போதாவது இணையதளங்களில் வெளியாகும்.

   

அப்படி வெளிவரும் புகைப்படங்கள், ரசிகர்களால் படு வைரலாக்கப்படும். திரைத்துறையில் தற்போது வரை விருப்பமான நட்சத்திர ஜோடிகள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியர். இந்நிலையில் எந்த திரை பிரபலங்களின் திருமணத்திலும் நடைபெறாத விஷயம் ஒன்று அஜித் ஷாலினி திருமணத்தில் நடந்துள்ளது.

அதாவது பொதுவாக, திரை பிரபலங்களின் திருமணம் முக்கியமான விஐபிகள் மற்றும் திரை நட்சத்திரங்களால் நிரம்பி இருக்கும். திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் பெரும்பாலும் சாப்பிட்டு செல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களை அழைத்து வந்த கார் டிரைவர்களுக்கு, பெரிய நடிகர்களின் திருமண விருந்தை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குமாம்.

இதற்காக, அஜித் தன் திருமணத்தில் விஐபிகளின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் ஓட்டுனர்களுக்கு என்று விருந்து சாப்பாடு வழங்கியுள்ளார். அதோடு தண்ணீர் பாட்டிலும் வழங்கியிருக்கிறார்கள். இதனால் கார் ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. எனினும், இதற்கு முன்பு எந்த ஒரு நட்சத்திர தம்பதிகளின் திருமணத்திலும் இந்த நிகழ்வு நடந்ததில்லையாம்.

இந்த சம்பவம் அதிகமாக பேசப்பட்டதை தொடர்ந்து, இவர்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகள் சூர்யா மற்றும் ஜோதிகாவும் தங்கள் திருமணத்தில் இதே நடைமுறையை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.