நீயா நானா கோபிநாத்தின் மனைவி எவ்வளவு அழகா இருக்காங்க….! இவரு அண்ணனா…? வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ

சின்னத்திரையில் ரசிகர்களுடைய ரசனைக்கு ஏற்றவாறு சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சேனலில் வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் பங்கேற்று வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பார்கள்.

   

அந்த வகையில் விஜய் டிவியில் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ரியாலிட்டி ஷோ ஆன நீயா நானா பல வருடங்களாக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் ஒரு நிகழ்ச்சி.

ஒரு விஷயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள இரு தரப்பினருடைய கருத்துக்களை கேட்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

இதனை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இவரை வெறும் கோபிநாத் என்று சொல்வதை விட நீயா நானா கோபிநாத் என்று சொன்னால் தான் இப்போது பலருக்கும் தெரிகிறது.

அந்த அளவிற்கு நிகழ்ச்சிக்கும், இவருக்குமான பிணைப்பு மிக ஆழமாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பட்டிமன்ற பேச்சாளரான இவர் ஆசிரியர் பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் நிமிர்ந்து நில் திருநாள் உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக கோபிநாத் முதலில் ராஜ் டிவி நெட் ஒர்க்கில் பணிபுரிந்து வந்தார்.

அதன் பிறகு ஜெயா டிவி, என் டிவி என்று கடந்து வந்த இவர் ரிப்போர்ட்டர், செய்தி தொடர்பாளர் தொகுப்பாளர் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

தற்போது விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார்.

இவர் விஜய் டிவியில் பல வருடங்கள் பணி புரிந்ததற்கு அடையாளமாக இவருக்கு கிடைத்த அங்கீகாரம் சிறந்த தொகுப்பாளருக்கான விருதை பெற்றார்.

இவர் துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு வெண்பா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கோபிநாத் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு தான் வெளியீட்டுள்ள புத்தகங்களில் அவருக்கு மிகப் பிடித்த புத்தகம் எதுவென்றால் தெருவெல்லாம் தேவதைகள்இது இவர் எழுதிய முதல் புத்தகம் ஆகும்.

அறந்தாங்கியில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் நீயா நானா நிகழ்ச்சி மட்டுமல்லாமல் விஜய் விருதுகள், குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?, உன்னால் முடியும் உள்ளிட்ட சில முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருதை 2006ம் ஆண்டு பெற்றார். இந்த நிலையில் இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.