மூவராக பொங்கலை கொண்டாடிய ஆரியன் – ஷபானா தம்பதியினர்… அந்த மூன்றாவது நபர் யார் தெரியுமா?… வைரல் புகைப்படம் இதோ…

செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தனது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த சீரியல்களில் ஒன்று ‘செம்பருத்தி’. இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷபானா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளையும் தாண்டி சாதனை படைத்து சமீபத்தில் நிறைவடைந்தது.

   

நடிகை ஷபானா ‘பாக்யலட்சுமி ‘ சீரியலில் நடித்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதிக்கவில்லை .இதன் பின்னர் ஆரியன் வீட்டில் மட்டும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்பொழுது கூட ஷபானா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் எளிமையாக 2021ல் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களது தல தீபாவளி கூட நடிகர் எம் எஸ் பாஸ்கர் உடன் இணைந்து கொண்டாடினார்கள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் தங்களுக்கு ஒரு தந்தை போல என்று ஷபானா குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகை ஷபானாவும் மற்றும் அவரது கணவர் ஆரியனும் எம்எஸ் பாஸ்கர் உடன் இணைந்து பொங்கல் பண்டிகையையும் கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை ஷபானா தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….